Wednesday, December 2, 2009

Tuesday, December 1, 2009

இருள் (அப்துல் ரகுமான்)

இருள் என்னும் கவிதையில் கவிஞர் அப்துல் ரகுமான் தத்துவ அழகியலோடு கவிதையைப் படைத்துக் காட்டியுள்ளார். இந்தக் கவிதை பித்தன் என்னும் கவிதைத் தொகுப்பில் உள்ளது.
அந்தத் தொகுப்பு முழுவதுமே ஒரு தத்துவ விசாரனை போல் அமைந்துள்ளது.

எல்லோரும்
விளக்கேற்றும் அந்தியில்
பித்தன்
விளக்கை அணைத்தான்.

விளக்கை ஏன்
அணைத்தாய்?
என்று கேட்டேன்.

'பார்ப்பதற்கு' என்றான்

அவன் மேலும் சொன்னான்:

காதலி
வெளிச்சத்தில்
தன்னை
வெளிப்படுத்த மாட்டாள்
கடவுளும் அப்படியே.

இருள்
ஆழமான கவிதை...

ஒளியை முத்தமிடும்
விட்டிலின் சிறகுகள்
எரிந்து போகின்றன.

கூட்டின் இருளில்
தவமிருக்கும்
பட்டாம் பூச்சி
சிறகுகளைப் பெறுகின்றன.

என்று போகும் இந்தக் கவிதை மிக தீட்சன்யமான ஒரு பார்வையை வாசகர்க்கு வழங்குகின்றன. ஒளியைத் தேடிப்போகும் விட்டில் பூச்சி இறந்து போகின்றன. இருளின் கூட்டிற்குள் தவமிருக்கும் பட்டாம் பூச்சி சிறகுகளைப் பெறுகின்றன. என்பது இருளில் மூழ்கி கிடக்கும் இதயங்களுக்கு ஒரு நம்பிக்கையை பெற்றுத்தருகிறது.
அதியமான்.
Powered By Blogger

Followers

About Me

My photo
Sirkazhi, Tamil Nadu, India
தமிழியல் ஆய்வாளர்