Saturday, August 22, 2009

இடைக்கால இலக்கியத் தமிழில் நிகழ்ந்த ஒலி மாற்றகள்

INTERNATIONAL CONFERENCE ON DRIVIDIAN LINGUISTICS
          CAS in Annamailai university
August 19-21,2009
 Phonological  Interchanges in Middle Literary Tamil
இடைக்கால இலக்கியத் தமிழில் நிகழ்ந்த ஒலி மாற்றகள்    
                                               அதியமான்
 

[இந்த ஆய்வுக் கட்டுரை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மொழியியல்துறை நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் 21.08.09 அன்று வாசிக்கப்பட்டது. இக்கட்டுரைக்கு நெறிக்காட்டியவர்கள் பேரா.கி.அரங்கன், மொழியியல்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். மற்றும் பேரா.ச.மனோகரன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை ஆகியவர்கள் என் பேராசியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Abbreviation பாம்பாட்டிச்சித்தர் (Pa.), இடைக்காட்டுச்சித்தர் (It.), அகப்பேய்ச்சித்தர் (Ak.), குதம்பைச்சித்தர்(Ku), கடுவெளிச்சித்தர் (Ka.), அழுகுணிச்சித்தர் (Az.), கொங்கணச்சித்தர் (Ko.) ஆகிய ஏழு சித்தர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன்  ]
 “டைக்கால இலக்கியத் தமிழில் நிகழ்ந்த ஒலி மாற்றகள்”  என்னும் பொருளில் அமைந்த இந்த ஆய்வுக்கட்டுரை  இடைக்காலத் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட ஒலி மாற்றத்தை விளக்குவதாக அமைகிறது. பேச்சுமொழியில் ஒலி மாற்றம் காணப்படுவது இயல்பானவை  ஆனால், இலக்கியப் படைப்பில் பேச்சு மொழி கலப்பது மிகவும் குறைவு, எனினும் மக்களின் பேச்சு மொழி, சங்க இலக்கியமான கலித்தொகை முதலே தொடங்கிவிடுகிறது எனலாம்(சான்றாக ஏடா கலி.87.90 ஏண்டா என்னும் உலக வழக்கு )1. ஆழ்வார் பாசுரங்களில் பேச்சுவழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்பின்  சித்தர்களின் காலப்பகுதியில் சற்று மிகுதியான அளவில் இலக்கியப் படைப்பில் பதிவாகத் தொடங்கியது என வரையறுக்கலாம். சித்தர் பாடல்களில் காணப்படும் ஒலி மாற்றத்தைக் குறிப்பாக உயிர் ஒலி மாற்றத்தையும் மெய் ஒலி மாற்றத்தையும் வடமொழி ஓலியன்கள் எவ்வகையான தமிழ் மொழி ஒலியனாக மாறுகின்றன என்பதையும் அந்த பேச்சு வழக்குச் சொற்கள் இலக்கிய வழக்கில் இருந்து எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளன என்பதை இக் கட்டுரைச் சுட்டிச்செல்கிறது. 
            இடைக்காலத்தமிழ் Medieval Tamil 500 A.D. – 1600 A.D.
தமிழ்மொழியை மேலை ஆய்வு நோக்கில் மூன்றாகப் பகுத்து ஆய்வு செய்யப்படுகிறது. அவை,  பண்டையத் தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத் தமிழ் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. மேலும் இடைக்காலத் தமிழைப் பல்லவர்காலத் தமிழ், சோழர்காலத் தமிழ், நாயக்கர்காலத் தமிழ் என மூன்றாகப் பிரிவாகப் மேலும் பிரிக்கப்படுகிறது2.
பல்லவர் காலத் தமிழ்     [ Early Medieval Tamil 500 A.D – 850 A.D.     ]
சோழர் காலத் தமிழ்       [ Middle Medieval Tamil 850 A.D. –1200 A.D. ]
நாயக்கர் காலத் தமிழ்     [ Later Medieval Tamil 1200 A.D – 1600 A.D. ]
இடைக்காலத் தமிழ்மொழித் தரவுகள் பெரும்பாலும் செய்யுள் வடிவத்தில் உள்ளன.  இலக்கியத்தில்  பெரும்பலும் பேச்சுவழக்குகள் கலப்பதில்லை ஆனால், இடைக்காலத் தமிழில் பேச்சுவழக்குகள் இலக்கியத்தமிழில் பதிவாகத் தொடங்குகின்றன. தற்கால இலக்கியங்களில் அவற்றை மிகுதியாக் காணமுடிகின்றன. வட்டார வழக்குகளை வைத்தே நாவல்கள், சிறுகதைகள் இன்று அடையாளப்படுத்தப்படுகின்றன. தற்கால பேச்சுவழக்கில் காணப்படக் கூடிய பலவகையான மொழிக்கூறுகள் (isoglosses), சித்தர் பாடல்களில் பதிவாகியுள்ளன.  
எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் உள்ள வேறுபாடுகள் அது அடைந்த ஒலிமாற்றங்களை வைத்தே வரையறுக்கின்றனர். டாக்டர் கால்டுவெல், ஜூல்ஸ் பிளாக், பேரா. டி. பரோ, பேரா.வ.அய்.சு., கே.வி. சுப்பையா, எல்.வி.இராமசாமிஐயர், பேரா. மு,சண்முகம்பிள்ளை,        பேரா. பத்திரிராஜ் கிருஷ்ணமூர்த்தி, பேரா. கி.அரங்கன். போன்ற மொழியியல் அறிஞர்கள்  திராவிட மொழிகளில் நிகழ்ந்த ஒலிமாற்றங்கள் ஆய்வுச் செய்து சில விதிகளையும் வரையறுத்துள்ளன.
   இலக்கியப் பனுவலில் பதிவாகியுள்ள பேச்சு வழக்கினைத் தொகுத்து அது எவ்வாறு எழுத்து வழக்கில் இருந்து ஒலிமாற்றம் அடைந்து பேச்சுவழக்காக மறியுள்ளது என்பதை மட்டும் இக்கட்டுரை விளக்கிச் செல்கிறது. குறிப்பாக இடைக்காலத்தில் வாழ்ந்தவர்களாக்க் கருதப்படும் சித்தர்களின்3 பாடல்களில் உள்ள வழக்குச்சொற்கள். இவர்கள் 15ஆம் நூற்றாண்டிற்கும் 18ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட  காலப்பகுதியில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறது.  அனைத்துப் பாடல்களும் செய்யுள் வடிவமாக குறிப்பாக சிந்து, கும்மி, தெம்மாங்கு ஆனந்தகளிப்பு, போன்ற நாட்டுப்புறப் பாடல் (Flok songs) வடிவமாக உள்ளன. இவை இடைக்காலப் பகுதிக்கும் தற்காலப் பகுதியின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட பகுதியாக உள்ளது.
1. உயிர் ஒலி மாற்றம். 
சொற்கள் ஒலிகயன்களால் ஆனவை, ஒலியன்கள் பொருளுடைய உருபனாக மாற்றுகின்றன. அப்பொருள் சொற்பொருளாகவோ அல்லது இலக்கணப் பொருளாகவோ இருக்கலாம் ஒரு சொல்லுக்கு இந்த இரண்டு பொருளும் இன்றியமையாதது. இதனை நன்னூலார் பொருளையும் (சொற்பொருள் Word Meaning ) தன்னையும் (இலக்கணப்பொருள் Grammatical Meaning) என்ற சொற்களால் சுட்டுகிறார்.  
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா /இருதிணை ஐம்பல் பொருளையும் தன்னையும்
மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின் / வெளிப்படைக் குறிப்பின் விரிப்பது சொல்லே.            
                                                                                                     
(நன்னூல்.சொல்லதிகாரம் 2 நூற்பா)
ஒலியன்களால் ஆன சொற்களில் பேச்சு வழக்கில் உச்சரிக்கப்படும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றன அவை உயிர் ஒலிமாற்றமாகவோ அல்லது மெய்யொலி மாற்றமாகவோ அமையும். அடுத்துவரும் ஒலிகளுக்கேற்பவும் வேறுமொழியில் இருந்து கடன்பேறாக வழங்கப்படும் சொற்கள் எந்த மொழியில் வழங்கப்படுகிறதோ அந்த மொழியின் ஒலியன் அமைப்புக்கு ஏற்ப ஒலிகள் மாற்றம் அடையும். முதலில் உயிர்ஒலி மாற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.   
1. அ > எ  கீழ் நடு உயிர் இடை இதழ்விரி முன்னுயிராதல்
                   தசநாடி > தெசநாடி     tacanāṭi > tecanāṭi           Ten vine                    Ak.8:3
தசம்+நாடி [ம்> Φ / ந] (தசம்skt.- பத்து) > தசநாடி
                 #தச > தெச ta>te  /ca
தரிசனம் > தெரிசனை          taricaṉam > tericaṉai                               Pa.81:2
   #தரி >தெரி  dha > dhe /ri
பேச்சுவழக்கில் காணாப்படும் இவ்வகையான ஒலியன் மாற்றங்கள்  சித்தர் பாடல்களில் காணக்கிடைக்கின்றன.  ஒலிமாற்றம் அடைவதற்கான காரணத்தை வரலாற்றுமொழியியல் விளக்கிச் செல்கிறது . மேல் தரவில் காணப்படும் இரண்டு சொற்களில் [த] என்னும் ஒலியன் > [தெ] என மாறியுள்ளது. இதில் அடிப்படையான மாற்றமாக [அ] > [எ] உயிரொலி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு சொற்களும்  சமஸ்கிருத சொற்களாகும், முதல்நிலையில் (intial sound) அகரஒலியுடன் இணைந்து ஒலிக்கப்படும் த என்னும் ஒலி சமஸ்கிருதத்தில் ஒலிப்புடைய ஒலியாக (voiced sound) ஒலிக்கப்படுகின்றன. இது பேச்சுவழக்கில் ஒலிப்புடைய ஒலியுடன் ஒத்து dha>dhe ஆக மாறியுள்ளது. இவ்விடத்தில் மட்டும் அல்லாமல் பிற இடங்களிலும் பெரும்பான்மையான மாற்றம் ஒலிப்புடைய ஒலிவரும் இடங்களிலே ஒலிமாற்றம் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றன.
ஜகம்               # ஜ்+அ > செ     செகம்    It.80:4.Az.22:3,Ko.11:1,15:1     
Dhavasam       # Dh+a>Dh+e    தெவசம்   Spoken Form
Dhavam                       “           தெவம்     Spoken Form
Dhasarathan                “           தெசரதன்  (அழகர் கோயில் ஓவியம்*)
Gangaiyemman # G+a >Ge       கெங்கையெம்மன்    “
*நாயக்கர் கால ஆவணத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர் கொடுத்தக் குறிப்பு (கோ.உத்திராடம் )
மேலே காட்டப்பட்ட  சொற்கள் பேச்சு வழக்கில் இன்று இவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன.  வட்டார வழக்கில் மட்டும் இவை வருகின்றன என எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ‘பல சமஸ்கிருதச் சொற்கள் ஒலிப்புடைய மெய்யொலி (voiced consonant)யுடன் தொடங்குகிறது. இவற்றின் முதல் அசையில் அகரம் உண்டு. அச்சொற்கள் தமிழுக்கு வரும்போது அகரம் எகரமாக மாறும்4
2.   [ ஏ > ஆ ]  மாற்றம் இடை இதழ்விரி முன்னுயிர் கீழ் நடு உயிராதல்
சேவல்  > சாவல்           cēval  > cāval             Ko.54:2
வேதனை > வாதனை   vētaṉai > vātaṉai            Ak.71:2
ஏ  → ஆ  / அ
முதல் நிலையில் வரும் ஏகார அதனை அடுத்து வரும் அகர ஒலிக்கேற்ப ஆகரமாக மாறியுள்ளது. இதனை  (Regressive Assimilation) பின்வழி ஒரினமாதலுக்குள் அடக்கலாம்.
          3. ஐ > இ  மாற்றம் கூட்டொலி மேல் இதழ்விரி முன்னுயிர் ஆதல்
உபாதை > உபாதி  upātai > upāti   It.119:1
பேச்சுவழக்கில் இறுதி ஐகார ஒலி இகரமாக மாறி வந்துள்ளது.
ஒலித்துணை உகரம் நிறைதல்
பேச்சுவழக்கில் தனிக் குறிலைத் தொடர்ந்து வரும் மெய்களின் ஈற்றில் உகர வந்து நிறைகின்றது. Cvc,c  என்னும் அசை அமைப்பு பேச்சுவழக்கில் ஒலிக்கப்படும் போது (Cvc,c > cvc,cv)  என்னும் அசை அமைப்பாக மாறுகின்றது. நெடிலைத் தொடர்ந்து வரும் ஒற்றிலும் பேச்சுவழக்கில் ஒலித்துணை உகரம் இணைகின்றது. Cvv,c > cvv,cv என்னும் அசை அமைப்பாக மாறுகின்றது.  

கண்ணு          ko. 68:1
கொல்லு        ka.8:4
கொள்ளு        pa.106:2,it.126:1, ka.23:4
செல்லு          ka.8:2
சொல்லு        ka.8:3
          தள்ளு           ka.23:2
          நாலு            ak.5:1;64:1,3,pa.84:1
          நில்லு           pa.72:3, it. 94:2, ka.8:1
          பண்ணு         it. 89:4
          முள்ளு          ka.23:1
          மொள்ளு       ka.23:3

தனிக்குறிலின் முன் ஒற்று உயிர்வர இரட்டும் என்னும் நன்னூல் விதி இதற்கு முழுவதும் பொருந்தி வருகிறது.  யகர அரையுயிர் எ என்னும் ஒலியாக மாற்றம் பெறுகின்றது.  ய்+அ > எ  semi vowle > e
 யமன் > எமலோகம்   ka.5:4    யார் > ஆர்         அப்பர் தேவாரம்5.45.1 யாருக்கடி என்பது ஆருக்கடி என மாறியுள்ளது அழுகணிச் சித்தர் பாடல், மேலே கட்டப்பட்ட உயிரொலி மாற்றங்கள் சித்தர் பாடல்களில் காணப்படுகின்றன.  
                 
2.  மெய் ஒலி மாற்றம் 
      சொற்களில் காணப்படும் ஒலிகள் பேச்சில் ஏற்படும் விரைவு  காரணமாகவும் சோமபலின் காரணமாகவும் அடுத்து வரும் ஒலிகளுக்கு ஏற்பவும், ஒலிகளை விடுவதும், ஒலிகள் வேறு ஒலிகளாக மாறுவதும் நடக்கின்றன என மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர். சித்தர் பாடல்களில் உயிர் ஒலி மாற்றம் போலவே சில மெய்யொலி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அவற்றை இரண்டாகப் பகுக்கலாம் ஒன்று அண்ண ஒலிகளின் இடைமாற்றம் மற்றொன்று ஒலி உழற்சிநிலை என்பனவாகும்.
அண்ண ஒலிகளின் இடைமாற்றம்
1. பின்னண்ண வெடிப்பொலி இடையண்ண ஒலியாதல், (velar voiceless stop change to Palatal stop)
க் > ய்
பரிகாரம் > பரியாரம்       parikāram > pariyāram   pām.62:3
இங்கு [க்] கா > [ய்] யா பின்னண்ண வெடிப்பொலி இடையண்ண ஒலியாக மாறியுள்ளது. இந்தச் சொல் சமஸ்கிருத சொல்லாகும் பரிகாரம் skt. parihāram இடையில் உள்ள [ கா > hā ] என்னும் ஒலி, ஒலிப்புடைய ஒலியாக உச்சரிக்கப் படுகிறது (fricative sound). ஒலிப்புடைய ஒலிகள் தமிழில் ஒலிமாற்றம் அடைகின்றன என்னும் விதியின் அடிப்படையில் ஹா என்னும் ஒலியே யா என மாறியுள்ளது. புதுக்கோட்டை மதுரை போன்ற தென்மாவட்டங்களில் [க] என்னும் ஒலி [ய]  வாக பேச்சுவழக்கில் மாறியுள்ளது. மகன் > மயென் ( [ha] > [ye] )
வைகாசி > வையாசி
இகல் > இயல் 
அயல் > அசல் அயல் என்னும் சொல் பக்கம் என்னும் பொருள்படும்; அயல் என்னும் சொல்லுக்குப் பதிலாக அசல் என்னும் சொல் தரவிலும் காணப்படுகிறது இன்று வழக்கிலும் காணக்கிடைக்கின்றன (அசலூர் போகாதே, அசலூர் பொண்ணு) இது  தலைகீழ் மாற்றமாக ய என்னும் அரையுயிர் உரசொலியக மாறுகின்றன.  
                       
2. நுனி அண்ண ஒலிப்பிலா அடைப்பொலி இடையண்ண ஒலிப்பிலா அடைப்பொலியதல் Alveolar voiceless stop change to Palatal stop
ற்ற் > ச்ச் 
ய → Φ / ச்ச்
ஆயிற்று  > ஆச்சு   āyiṟṟu  > āccu       Ak.44:2, ko. 40:3, 41:2, 95:4
ஆனது >ஆயிற்று > ஆச்சு

மேராச்சு                        Ko.95:4
உண்டாச்சு                    Pa.67:2
வித்தாச்சு                      Ko.77:4
நயமாச்சு                       Ko.40:3            
            மாய்கையாச்சு                Ko.41:2
            உள்ளபடியாச்சு              Ak.44:2
            ஆச்சுது                         Ko.77:2
           இறந்துபோச்சுதே           Ko.44:4

            இடைக்காலத் தமிழில் இவ்விதிகான சான்றுகள் நிரம்ப கிடைக்கின்றன. இந்த விதியில் எவை முன்னர் நடந்தன என்னும் சர்ச்சையும் நிலவி இருக்கின்றன.  இரட்டை றகர ஒலி இரட்டை சகர ஒலியாக மாறிய பிறகே ‘யி’>Φ கெட்டுப்போய்யிருக்கும் என வரையறுத்தனர்.
Free Variation ஒலி உழற்சிகள்
மொழியியல் விதிகளுக்குள் அடங்காத சில ஒப்புமையுடைய ஒலிகளை ஒலி உழற்நிலை என அழைக்கின்றோம்.
1. ஒலிப்பில பல் ஒலி இடையண்ண ஒலிப்பிலாத் தடை ஒலியாதல் Dental voiceless stop interchange to Palatal stop)
த் > ச் #     வயது > வயசு   vayatu > vayacu     ko.67:4
2. பல்லின மூக்கொலி நுனி அண்ண மூக்கொலியாக ஆதல் ( Dental Nasal interchange to Alveolar Nasal)
ந் > ன்        அநேகம் > அனேகம்  anēkam > aēkam                ko.45:2
    ந்ந் > ஞ்ஞ்    ஐந்நூறு > ஐஞ்ஞூறு  ஐஞ்ஞாறாம்                           ko.37:1 
இரட்டித்த நுனிநா பல் மூக்கொலிகள் இடையண்ண ஒலிகளையடுத்து இடையண்ண மூக்கொலிகளாகின்றன.
3.   நுனி அண்ண மருங்கொலி  பின் நுனி அண்ண தொடர் நாவளை ஒலியாதல்  Back Alveolar continuant Retroflex interchange to Alveolar Lateral
ல்ல் > ள்ள்   மெல்ல > மெள்ள
4. பின் நுனி அண்ண தொடர் நாவளை ஒலி நுனி அண்ண மருங்கொலியாதல் ( Back Alveolar continuant Retroflex interchange to Alveolar Lateral)
ழ் > ல் துழாவி > துலாவி tuāvi > tulāvi   pām.123:5
5. பின் நுனி அண்ண தொடர் நாவளை ஒலி  இடையண்ண ஒலிப்பிலா அடைப்பொலியாதல் ( Back Alveolar continuant Retroflex interchange to Palatal stop)
ள் > ச்    [ { உ}  ஒலித்துணை உகரம் ] 
ஆயுள் > ஆயுசு   āyu > āyucu   koṅ.105:1
ஆகிய மெய்யொலி உழற்சிகள் காணப்படுகின்றன.
3. வடமொழி ஒலி தமிழ் ஒலியன் ஆதல்
வடமொழி ஒலி தமிழ் ஒலி அமைப்பிற்குள் வைத்து ஒலிக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை சான்றுகளுடன் நிறுகிறது.
1. ஜ் > ச் / [அம்]   நிஜம் > நிசம்  Ko.19:4
2. ஷ் > ட் / ச் [ க்,ட்,அம்,ண்,]

நிஷ்களம் > நிட்களம்
நிஷ்டை > நிட்டை    
தோஷம் > தோடம்
                   விஷ்ணு > விட்ணு
                   நிஷ்டூரன்  > நிட்டூரன்

[ sh > # ca ]  ஆமிஷம்>ஆமிசம்
வடமொழி ஒலிகள் கிரந்த எழுத்துக்களில் எழுதாமல் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்களில் எழுதுவதின் மூலம் அவற்றை ஒலிப்பிலா ஒலியாக உச்சரித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. 
            
            Conclusion of this paper ஆய்வு முடிவுகள்
  • தமிழ் இலக்கியத்தில் சங்க கால இலக்கியத்தில் இருந்தே பேச்சுவழக்குகள் கலக்க தொடங்கிவிடுகின்றன.
  • இடைக்காலத் தமிழில் உள்ள சித்தர் பாடல்களில் பேச்சுவழக்குகள் காணப்படுகின்றன.
  • ஒலிப்புடைய ஒலிகளே முதல்நிலையாக (initial position )இருந்தாலும் இடையில் (Middle Position) இருந்தாலும்  ஒலிமாற்றம் அடைகின்றன. இதுவே இவ் ஆய்வின் கருதுகோளாக அமைந்து ஆய்வை நிறுவியுள்ளது.
  • பேச்சுவழக்குகள் எழுத்து வடிவில் இடைக்காலத்தில் பதிவாகியுள்ளன.
  • தொடர்ச்சியாக நிகழ்ந்த மாற்றத்தை தொகுத்து பிற திராவிட மொழிகளில் அவை எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கண்டறிவது காலத்தின் தேவையாகிறது.
சான்றெண் விளக்கம்
     1. தண்டபானிதேசிகர் உருவாக்கிய சங்க இலக்கியக் களஞ்சியம் ப.219.
             2. சு.சக்திவேல், தமிழ் மொழி வரலாறு, 2003, ப.155
            3. பாம்பாட்டிச்சித்தர் (Pa.), இடைக்காட்டுச்சித்தர் (It.), அகப்பேய்ச்சித்தர் (Ak.),
                 குதம்பைச்சித்தர்(Ku), கடுவெளிச்சித்தர் (Ka.), அழுகுணிச்சித்தர் (Az.), கொங்கணச்சித்தர் (Ko.)
4. சு.சக்திவேல், தமிழ் மொழி வரலாறு 2003, ப. 180
கருவி நூல்கள்
தமிழ்ப்பேரகராதி   சென்னைப் பல்கலைக்கழகம் 1982
அகத்தியலிங்கம்    தமிழ் மொழி அமைப்பியல்.
டாக்டர் பொற்கோ இக்காலத் தமிழ் இலக்கணம்
டாக்டர் சு. சக்திவேல் தமிழ் மொழி வரலாறு. 2003
Caldwell, R. A. Comparative Grammar of Dravidian of South Indian Family of Languages 
Burrow, T & Emeneau,  M.B. A Dravidian Etymological Dictionary  Indian edition 1998.
 Bh.Krishnamurti The Dravidian Languages Cambridge Language Surveys 2003
Prof.T.Burrow, Collected Papers on Dravidian Linguistics Annamalai University,
Annamalai Nagar, S.India. 1968

Wednesday, August 19, 2009

புகைப்படம்


யாம்

கவிதை

பூ

வீட்டிற்குச் செல்லும் வழியில்

நான் பூக்களைப்

பார்க்கும் போதெல்லாம்

உன் முகங்களைப் பார்த்துக் கொள்வேன்

என்று சொன்ன கவிதை

நினைவிருக்கிறதா

Powered By Blogger

Followers

About Me

My photo
Sirkazhi, Tamil Nadu, India
தமிழியல் ஆய்வாளர்